சீட்டு




சீட்டு (Auctions)


சீட்டுக் கட்டுதல் என்பது தமிழரிடையே வழங்கி வரும் ஒரு பணச் சேமிப்பு அல்லது சேகரிப்பு முறையாகும். குழுவாகச் சேர்ந்து பணத்தை மாதாந்தம் பங்களித்து எதாவது ஒரு தேர்வு முறையில் ஒருவருக்கு வழங்கப்படும். பொதுவாக பத்தில் இருந்து இருபது தனிநபர்கள் அல்லது வணிகங்கள் ஒரு சீட்டில் கலந்துகொள்வர். சீட்டை ஒழுங்கு செய்பவர் அல்லது சீட்டை பிடிப்பவர் இரண்டாவது சீட்டைப் பெறுவது வழக்கம்.





ஏலச் சீட்டு
 

ஏலச் சீட்டு அல்லது கழிவுச் சீட்டு எனப்படுவது சற்றுச் சிக்கலானது, ஒப்பீட்டளவில் இடர் கூடியது, இலாபமும் கூடியது. யார் சீட்டுத் தொகையைப் பெறுவது என்பதைக் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்காமல் ஏலம் எனப்படும் முறையில் தேர்ந்தெடுப்பர். ஏலத்தில், ஒவ்வொரு மாதமும் எவர் ஒருவர் குறைந்த அளவில் சீட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள ஏலம் எடுக்கிறாரோ, அவருக்கு சீட்டுத் தொகை போகும். அந்தக் கழிவுத் தொகை சீட்டில் கலந்து கொள்வோருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
இரண்டு நோக்கங்ளுக்காக ஒருவர் சீட்டுத் தொகையைக் கழித்து ஏற்றுக் கொள்வார். ஒன்று அவர் அத் தொகையை எடுத்து முதலீடு செய்து கூடிய இலாபம் ஈட்டும் நோக்குடன். மற்றையது அவருக்கு உடனடியாக பணத் தேவை என்றால்.



 
உதாரணம் 
  மொத்த மாத 10, 
   மொத்த ரூபா 1,00,000, 
   மொத்த உறுப்பினர்கள் 10, இவர்களுள் சீட்டை பிடிப்பவர் ஒருவர், 
   ஒவ்வொரு மாதமும் 10,000 கொடுக்க வேண்டும்.
 


ஏலத்தில், ஒவ்வொரு மாதமும் எவர் ஒருவர் குறைந்த அளவில் சீட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள ஏலம் எடுக்கிறாரோ அவருக்கு சீட்டுத் தொகை போகும் மித பணம் வழங்கப்படும்.
இரண்டம் மாதம் தவிர மித மாதங்களில் ஏலம் நடைபெறும், ஏனெனில் இரண்டம் மாதம் சீட்டை பிடிப்பவர் எடுத்து கொள்வார்கள். மொத்த ரூபாய் 1,00,000 தில் 3000 ரூபாய் சீட்டை பிடிப்பவர்களுக்கு போக மீதம் 97,000 ரூபாய் ஏலம் விடப்படும். ஏலம் எடுக்காதவர்கள் பணத்தை 10 மாதம் முடிவில் 97,0௦௦ ருபையாக பெற்று கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

தண்டல் வட்டி